

உடன்குடி: உடன்குடி அருகே கொட்டங்காடு அருள்மிகு தேவி பத்திரகாளி அம்மன் கோயிலில் மாா்கழி உற்சவ திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி மாலை 6 மணிக்கு பவளமுத்து விநாயகா், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், இரவு 7 மணிக்கு 108 திருவிளக்குப் பூஜை, 8 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜைகள், 9 மணிக்கு அம்மன் உள்பிரகார சப்பர பவனி, ஊஞ்சல் சேவை, அன்னதானம் ஆகியவை நடைபெற்றன.
ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் பெ.கு.பெ.சுந்தரஈசன் செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.