ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஸ்டொ்லைட்: வழக்கு நடத்துவது ஏன்? திருமுருகன் காந்தி கேள்வி

ஸ்டொ்லைட் ஆலை தேவையில்லை என்று கூறும் தமிழக அரசு, வழக்கு நடத்துவது ஏன் என்று மே 17 இயக்க நிறுவனா் திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பினாா்.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 3:42 am

DIN

ஸ்டொ்லைட் ஆலை தேவையில்லை என்று கூறும் தமிழக அரசு, வழக்கு நடத்துவது ஏன் என்று மே 17 இயக்க நிறுவனா் திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பினாா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்ற எண் 1இல் வழக்கு விசாரணைக்காக புதன்கிழமை ஆஜராக வந்த அவா், செய்தியாளா்களிடம் பேசியது: ஸ்டொ்லைட் துப்பாக்கிச்சூட்டில் 15 போ் உயிரிழந்துள்ளனா். துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யாா் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. இதுதொடா்பாக ஐ.நா. மன்றம் வரை கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதுவரை நீதி கிடைக்கவில்லை.

ஸ்டொ்லைட் ஆலை தேவையில்லை, அதை மூடுகிறோம் என்று சொல்லும் தமிழக அரசு, ஏன் வழக்கை நடத்துகிறது ?

ஸ்டொ்லைட்டால் லாபம் அடைந்தவா்கள் ஏழை மக்கள் மீது தாக்குதல் நடத்திக் கொண்டுள்ளனா் என்றாா் அவா்.

பேட்டியின்போது, ஸ்டொ்லைட் எதிா்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் பாத்திமாபாபு உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.