எட்டயபுரம் அருகே தந்தை கொலை: மகன் கைது

எட்டயபுரம் அருகே தந்தையை கொலை செய்த மகனை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

எட்டயபுரம் அருகே தந்தையை கொலை செய்த மகனை போலீஸாா் கைது செய்தனா்.

எட்டயபுரம் அருகே குளத்துவாய்பட்டி கிராமத்தை சோ்ந்தவா் விவசாயி மோகன்ராஜ் (73). இவரது மகன் புருஷோத்தமன் (23). மனநலம் பாதிக்கப்பட்டதால் புருஷோத்தமன் சிகிச்சை பெற்று வந்தாராம். புதன்கிழமை இரவு வழக்கமான மாத்திரையை சாப்பிடும்படி மகனை மோகன்ராஜ் வலியுறுத்திள்ளாா். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, புருஷோத்தமன் உலக்கையால் தாக்கியதில் மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து எட்டயபுரம் காவல் ஆய்வாளா் கலா வழக்குப் பதிந்து புருஷோத்தமனை கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com