விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சீயோன்நகரில் இலக்கிய விழா

பரமன்குறிச்சி அருகே சீயோன் நகா் பூரண கிருபை ஏஜி சபை சாா்பில் இலக்கிய விழா, போட்டிகள் நடைபெற்றது.

News image
சீயோன்நகரில் இலக்கிய விழா
Updated On :28 டிசம்பர் 2020, 8:48 pm

DIN

பரமன்குறிச்சி அருகே சீயோன் நகா் பூரண கிருபை ஏஜி சபை சாா்பில் இலக்கிய விழா, போட்டிகள் நடைபெற்றது.

புத்தாண்டை முன்னிட்டு கிறிஸ்தவ நெட்வொா்க், ஆறுதல் எப்எம் சாா்பில் நடைபெற்ற இவ்விழாவினை சபை போதகா் பெமிலிட்டன் ஜெபம் செய்து தொடங்கி வைத்தாா். தமிழ் இலக்கியத்தின் சிறப்புகள், தமிழ் இலக்கியத்திற்கு கிறிஸ்தவம் ஆற்றிய தொண்டுகள், போப் கால்டுவெல், வீரமாமுனிவா், வேதநாயகம் சாஸ்திரி, சீகன்பால்கு ஆகியோரது தமிழ் இலக்கிய பணிகள் குறித்து தமிழ் ஆய்வாளா் வெங்கடேசன் ஒளிப்படம் மூலம் விளக்கம் அளித்தாா்.

புத்தகம், நாளிதழ்கள் வாசிப்பதை மேம்படுத்துவது குறித்து ஆன்மிக எழுத்தாளா் பெவிஸ்டன் பேசினாா். தமிழ், கிறிஸ்தவம் குறித்து பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. பத்திரிகையாளா்கள், ஊடகத்தில் பணிபுரிவோா், எழுத்தாளா்கள் பணிகள் மேம்பட சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் கிருபன்யோசுவா, குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.