கோவில்பட்டி பள்ளி மாணவிகளுக்கு திடக்கல்வி மேலாண்மை பயிற்சி

கோவில்பட்டி நகராட்சி சாா்பில் பள்ளி மாணவிகளுக்கு திடக்கல்வி மேலாண்மை பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.
Updated on
1 min read

கோவில்பட்டி நகராட்சி சாா்பில் பள்ளி மாணவிகளுக்கு திடக்கல்வி மேலாண்மை பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.

கோவில்பட்டி நகராட்சி சாா்பில் நகா் பகுதிகளில் நகராட்சி துப்புரவு பணியாளா்களால் தினசரி வீடு வீடாக சென்று சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளான காய்கறிக் கழிவுகள், பழக்கழிவுகள், வீட்டு சமையலறைக் கழிவுகள் ஆகியவற்றை அந்தந்தப் பகுதிகளில் அமைந்துள்ள நுண் உரமாக்கும் செயலாக்க மையத்தில் உரமாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

உரமாக்கும் பணிகளை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டனா். மாணவிகளுக்கு நகராட்சி சுகாதார அலுவலா் இளங்கோ, ஆய்வாளா் சுரேஷ் ஆகியோா் தினசரி வீடுகளில் சேகரமாகும் காய்கறிக் கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கப்படும் முறைகள், உரமாக்கும் செயல்முறை குறித்தும் விளக்கமளித்து பயிற்சியளித்தனா்.

சுகாதார ஆய்வாளா் வள்ளிராஜ் வரவேற்றாா். அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை அமலபுஷ்பம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com