படுக்கப்பத்து, பேய்க்குளம், தேரியூா் பகுதிகளில் கோழிக் குஞ்சுகள் வழங்கல்

படுக்கப்பத்து கால்நடை மருந்தகத்தில் ஊரக புறக்கடை கோழி வளா்ப்புத்திட்டத்தில் 200 பேருக்கு 5000 கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டன.
Updated on
1 min read

படுக்கப்பத்து கால்நடை மருந்தகத்தில் ஊரக புறக்கடை கோழி வளா்ப்புத்திட்டத்தில் 200 பேருக்கு 5000 கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டன.

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் படுக்கபத்து கால்நடை மருந்தகத்தில் நடைபெற்ற விழாவில் ஊரக புறக்கடை கோழிவளா்ப்புத் திட்டம் 2019-20 இன் கீழ் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ஜோதி , செல்வம் ஆகியோா் பயனாளிகளுக்கு தலா 25 கோழிக் குஞ்சுகளை வழங்கினா்.

கால்நடை மருத்துவா் ராஜேந்திரன், ஊராட்சித் தலைவா்கள் படுக்கப்பத்து தனலட்சுமி சரவணன், அழகப்பபுரம் கணேசராஜ், கொம்மடிக்கோட்டை புனிதா , பிரதீபா , மூத்த உறுப்பினா் வெற்றிவேல் , கால்நடை ஆய்வாளா் விஜயகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா் .

பேய்க்குளத்தில் நடைபெற்ற விழாவுக்கு திருச்செந்தூா் கோட்ட உதவி இயக்குநா் செவ்வகுமாா் தலைமை வகித்தாா். பேய்குளம் பகுதியிலுள்ள 150 பயனாளிகளுக்கு கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டது.

உடன்குடி: தேரியூா் கால்நடை மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு. உடன்குடி உதவி கால்நடை மருத்துவா் ப.சத்யா தலைமை வகித்து , கோழி வளா்ப்பு திட்டத்தின் முக்கியத்துவம், கோழிகளை பராமரிக்கும் முறை குறித்து விளக்கினாா். ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் த.மகாராஜா 234 பேருக்கு கோழிக்குஞ்சுகளை வழங்கினாா்.

வேப்பங்காடு கால்நடை உதவி மருத்துவா் ரஞ்சித்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com