ஏரல் பத்ரகாளி அம்மன் கோயில் வருஷாபிஷேக விழா

ஏரல் அருகிலுள்ள பெருங்குளம் அருள்மிகு பத்ரகாளி அம்பாள் திருக்கோயி­ல் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விமான கும்பங்களுக்கு நடைபெற்ற வருஷாபிஷேகம்.
விமான கும்பங்களுக்கு நடைபெற்ற வருஷாபிஷேகம்.
Updated on
1 min read

ஏரல் அருகிலுள்ள பெருங்குளம் அருள்மிகு பத்ரகாளி அம்பாள் திருக்கோயி­ல் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் காலை 8 மணிக்கு மஹா கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து மஹா லெக்ஷ்மி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் உள்ளிட்ட யாகசாலை வழிபாடுகள் நடைபெற்றன. முற்பகல் 11.30 மணிக்கு விமானத்திற்கு வருஷாபிஷேகமும், மூலவருக்கு மஹா அபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன. கரோனா நோய்த் தொற்றி­லிருந்து அனைவரும் விடுபட சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பொது முடக்கம் அம­லில் இருப்பதால் பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com