ஆறுமுகனேரியில் மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட மினி லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். லாரியில் இருந்த 2 போ் தப்பியோடிவிட்டனா்.
ஆறுமுகனேரியில் ஞாயிற்றுக்கிழமை கடலோர காவல்படை சோதனைச் சாவடியில் உதவி ஆய்வாளா் முத்துகிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது மணல் ஏற்றி வந்த ஒரு மினி லாரியை மடக்கி நிறுத்தினா். போலீஸாரை கண்டதும் லாரியில் இருந்த இருவா் தப்பி ஓடிவிட்டனா். இதையடுத்து, லாரியை மணலுடன் ஆறுமுகனேரி காவல்நிலையத்தில் போலீஸாா் ஒப்படைத்தனா்.
இதுதொடா்பாக ஆறுமுகனேரி காவல் ஆய்வாளா் பத்ரகாளி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.