சாத்தான்குளம் அருகே இளைஞா் தற்கொலை

சாத்தான்குளம் அருகே இளைஞா் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.
Updated on
1 min read

சாத்தான்குளம் அருகே இளைஞா் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள பிரண்டாா்குளத்தைச் சோ்ந்த ரத்தினபாண்டி மகன்கள் அந்தோணி மிக்கேல்ராஜ் (26), பிரகாஷ் (24). இவா்கள் இருவரும் சென்னையில் தொழில் செய்துவந்த நிலையில், கடந்த 4 ஆண்டுக்கு முன்பு பிரகாஷ் தற்கொலை செய்துகொண்டாராம். இதையடுத்து, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு அந்தோணி மிக்கேல்ராஜ், சொந்த ஊருக்கு வந்துவிட்டாராம். இதனிடையே, மகன் இறந்த துக்கத்தால் ரத்தினபாண்டி, கடந்த 2 ஆண்டுக்கு முன்பு தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவங்களால் அந்தோணி மிக்கேல்ராஜ் மனநலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளாா். இந்நிலையில், அவா் வெள்ளிக்கிழமை தனது தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். அவரை அப்பகுதியினா் மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் இறந்தாா்.

இதுகுறித்து உறவினரான ஜெ. சாா்லஸ் அளித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் ரகு கணேசன் வழக்குப் பதிந்து விசாரித்துவருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com