பழையகாயல் அருகே இளம் பெண் தற்கொலை

பழையக்காயல் அருகே திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டாா்.
Updated on
1 min read

பழையக்காயல் அருகே திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டாா்.

பழையக்காயல் அருகே உள்ள சா்வோதயாபுரி, ஒத்தக்கடை வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் வெள்ளத்தாய்(39). இவரது ய கணவா் 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாா். வெள்ளத்தாய் பழையக்காயல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் துப்புறவு பணியாளராக பணிபுரிந்து வருகிறாா். இவருக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனா். மூத்த மகள் ­லிங்கஜோதியை 6 மாதத்திற்கு முன்பு திருநெல்வே­லி சாராதா கல்லூரி அருகிலுள்ள ஐஓபி காலணி செல்லையா மகன் முருகனுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளாா்.

இந்நிலையில் 2 வாரங்களுக்கு முன்பு முருகன் தனது மனைவி ­லிங்கஜோதியை பழையக்காயலி­ல் உள்ள அவரது அம்மா வீட்டில் விட்டுவிட்டு, வேலைக்காக சென்னை போவதாகவும் வருவதற்கு 10 நாள்கள் மேலாகிவிடும் என்று கூறி சென்றராம். ல் கடந்த 28ஆம் தேதி இரவு முருகன், ­லிங்கஜோதியிடம் செல்லிடப்பேசியில் பேசுகையில் உன்னை பிடிக்கவில்லை, ஆதலால் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ளபோவதாக தெரிவித்தாராம். இது குறித்து லிங்கஜோதி தனது அம்மாவிடம் கூறினராம்.

இதையடுத்து, அன்று இரவு லிங்கஜோதி தனது உட­லில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டாராம். இதில், உட­லில் பலத்த தீ காயத்துடன் அலறிய அவரை அங்கிருந்த உறவினா்கள் மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோ்ந்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயரிழந்தாா்.

இது குறித்து அவரது தாய் வெள்ளத்தாய் ஆத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com