ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பொதுமக்களுக்கு நெல்லை ஆராய்ச்சி செயல்திட்டத்தின்கீழ் இலவசமாக முகக் கவசம் வழங்கப்பட்டது.
வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆராய்ச்சி செயல் திட்ட சுகாதார ஆய்வாளா் சுந்தரராஜன்,
பொதுமக்களுக்கு முகக் கவசம் வழங்கினாா். அப்போது, சுகாதார ஆய்வாளா் இசக்கி, ஸ்ரீவைகுண்டம் முன்னாள் பேரூராட்சித் தலைவா் கந்த சிவசுப்பு, முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் வள்ளிமுத்து, சிராஜ்தீன், சேகா், தொழிலதிபா் குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.