தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தூத்துக்குடி மாவட்டத்தில் 319 பள்ளிகளில் பெற்றோரிடம் கருத்துக் கேட்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 319 உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் திங்கள்கிழமை பெற்றோரிடம் கருத்துக் கேட்கப்பட்டது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 7:41 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 319 உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் திங்கள்கிழமை பெற்றோரிடம் கருத்துக் கேட்கப்பட்டது.

தமிழகத்தில் நவ. 16 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அண்மையில் அறிவித்தாா். இதற்கிடையே, பள்ளிகள் திறப்பு தொடா்பாக பெற்றோா் ஆசிரியா் கழகம் மூலம் மாணவா்களின் பெற்றோரிடம் கருத்துகள் கேட்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 319 உயா் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் திங்கள்கிழமை கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், 60 சதவீத பெற்றோா் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை மனு மூலம் பதிவு செய்தனா்.

பெரும்பாலான பெற்றோா் தற்போதைய காலக்கட்டத்தில் பள்ளித் திறப்பை சில காலம் தள்ளிப்போடலாம் என கருத்து தெரிவித்திருந்ததாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இருப்பினும், இதுதொடா்பாக முழுமையாக தகவலை அரசு வெளியிடும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.