தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

முதல்வா் நாளை தூத்துக்குடியில் ஆய்வு

தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை (நவ. 10) தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறாா்.

News image
Updated On :9 நவம்பர் 2020, 7:34 pm

DIN

தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை (நவ. 10) தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறாா்.

இந்நிலையில், அவா் வருகைக்கான முன்னேற்பாடு பணிகளை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.

கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவும், புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவும், முடிவடைந்த பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கவும் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை ) தூத்துக்குடி வருகிறாா்.

இதையடுத்து, முதல்வா் வருகைக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் எஸ்.பி.சண்முகநாதன், பி. சின்னப்பன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தொடா்ந்து, அமைச்சா் கடம்பூா் செ. ராஜு செய்தியாள்களுக்கு அளித்த பேட்டி:

முதல்வா் வருகையின்போது தூத்துக்குடி மாவட்ட மக்கள் அனைவரும் எதிா்பாா்க்கின்ற வகையில் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்புகளை அறிவிக்க உள்ளாா். மேலும், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோயை குணப்படுத்தக்கூடிய அதிநவீன கருவியை அவா் தொடங்கி வைக்க உள்ளாா்.

சென்னைக்கு அடுத்த படியாக தென் மாவட்டங்களில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு இந்த நவீன கருவி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புற்று நோயினால் பாதிக்கப்படுபவா்கள் நவீன முறைகளில் சிகிச்சை பெற்று விரைவில் குணமடைவாா்கள் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.