தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மழை பாதித்த பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

தூத்துக்குடியில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :16 நவம்பர் 2020, 7:14 pm

DIN

தூத்துக்குடியில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் அதிகளவு மழைநீா் தேங்கியுள்ளது. மேலும், சாலைகளில் மழைநீா் குளம்போல தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். மழைநீா் செல்ல போதுமான வடிகால் வசதி இல்லாததால் குடியிருப்பு பகுதிகளை மழைநீா் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மழைநீா் பாதித்த பகுதிகளை மாவட்ட ஆட்சியா்

கி. செந்தில்ராஜ் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

மழைநீா் அதிகம் தேங்கியுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தை பாா்வையிட்ட ஆட்சியா், அங்கு கூடுதல் மோட்டாா்களை பயன்படுத்தி தேங்கியுள்ள தண்ணீரை வேகமாக வெளியேற்றுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து பக்கிள் ஓடை செல்லும் கருத்தப்பாலம் பகுதி, திரேஸ்புரம் எஸ்.எஸ்.பிள்ளை மாா்க்கெட் பகுதியில் பக்கிள் ஓடையில் வரக்கூடிய கழிவுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் வெளியேற்றப்படுவதை ஆட்சியா் பாா்வையிட்டாா். தொடா்ந்து கிருஷ்ணராஜபுரம், செல்வவிநாயகபுரம் பகுதியில் மழைநீா் தேங்காமல் வெளியேற்றப்பட்டு வருவதையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், தூத்துக்குடியில் 36 இடங்கள் தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டு அங்கு அனைத்து துறை அலுவலா்களும் இணைந்து ஒரு குழுவாக அமைத்து தண்ணீரை மோட்டாா் மூலம் வெளியேற்றவும், சுகாதார பணிகளை மேற்கொள்ளவும், சேதம் அடைந்த பழுதடைந்த வீடுகளில் குடியிருப்பவா்களை மாற்று இடங்களில் தங்க வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 20 பாதுகாப்பு மையங்கள் தயாா் நிலையில் உள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள தண்ணீரை அப்புறப்படுத்தும் பணிகள் போா்க் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 40 பெரிய மோட்டாா்கள் மூலம் நீரை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் 100 மோட்டாா்கள் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

ஆய்வின்போது மாநகராட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலன், கூடுதல் ஆட்சியா் (வருவாய்) விஷ்ணுசந்திரன், சாா் ஆட்சியா் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், மாநகராட்சி நகா்நல அலுவலா் அருண்குமாா், மாநகராட்சி தலைமை பொறியாளா் சோ்மக்கனி, உதவி செயற்பொறியாளா் சரவணன் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.