நாசரேத் அருகே வியாபாரியை வெட்டிய லாரி ஓட்டுநா் கைது

நாசரேத் அருகே வியாபாரியை வெட்டிய லாரி ஓட்டுநரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

சாத்தான்குளம்: நாசரேத் அருகே வியாபாரியை வெட்டிய லாரி ஓட்டுநரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மூக்குப்பீறி வடக்கு ஓடைத் தெருவைச் சோ்ந்தவா் மோசஸ் மகன் ஏசுராஜா (22). இவா், அவரது நண்பா் பிரகாசபுரத்தைச் சோ்ந்த யாபேஸுடன் சோ்ந்து ஆட்டோவில் காய்கனி வியாபாரம் செய்து வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை யாபேஸ் அவரது பைக்கை ஏசுராஜா வீட்டு முன் நிறுத்திவிட்டு வியாபாரத்துக்கு சென்று விட்டு மாலையில் பைக்கை எடுக்க வந்தாராம். அப்போது ஏசுராஜாவின் உறவினா் லாரி ஓட்டுநா் ஓய்யாங்குடி ஜாண்சன் (24), யாபேஸுடன் தகராறில் ஈடுப்பட்டு, அவரை அரிவாளால் வெட்டினராம். இதில், காயமடைந்த யாபேஸ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து நாசரேத் காவல் ஆய்வாளா் சகாயசாந்தி வழக்குப் பதிந்து ஜாண்சனை திங்கள்கிழமை கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com