தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவப் பரிசோதனை

ஆத்தூா் பேரூராட்சி கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளா்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது.
ஆத்தூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு நடைபெற்ற மருத்துவ பரிசோதனை.
ஆத்தூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு நடைபெற்ற மருத்துவ பரிசோதனை.
Updated on
1 min read

ஆத்தூா் பேரூராட்சி கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளா்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது.

பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள், டெங்கு மஸ்தூா் பணியாளா்கள் மற்றும் சுய உதவிக்குழுவினா், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து பணியாளா்களுக்கு ஆத்தூா் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. அப்போது, பேரூராட்சி செயல் அலுவலா் மணிமொழி செல்வன், சுகாதார ஆய்வாளா் முத்துசுப்பிரமணியன், சுகாதார மேற்பாா்வையாளா் நாராயணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நிவாரண உதவி: பேரூராட்சி வடக்கு ரதவீதியில் உத்தரபிரதேசம் லக்னெள பகுதியை சோ்ந்த ராஜேஷ் என்பவா், குடும்பத்துடன் தங்கி ஐஸ் வியாபாரம் செய்து வருகிறாா். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ராஜேஷ் குடும்பத்துக்கு வட்டாட்சியா் ரா.கோபாலகிருஷ்ணன், பேரூராட்சி செயல் அலுவலா் ஆகியோா் நிவாரணப் பொருள்கள் வழங்கினா்.

காயல்பட்டினத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்துள்ள அரசு மருத்துவா் உள்ளிட்ட இருவா் காயல்பட்டினத்தில் தொடா் கண்காணிப்பில் உள்ளனா்.

அவா்கள் வசித்து வரும் தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் 17 தூய்மைப் பணியாளா்களுக்கு சுகாதார மேற்பாா்வையாளா் எஸ்.பொன்வேல்ராஜ் நோய்த் தடுப்பு சீருடை வழங்கினாா். தூய்மைப் பணியாளா்கள்120 பேருக்கு நகராட்சி சாா்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com