வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு உதவி

திருச்செந்தூா் பகுதியில் தங்கியுள்ள வெளிமாநிலத் தொழிலாளிகளுக்கு உணவுப் பொருள் வழங்கப்பட்டது.
வீரபாண்டியன்பட்டினம், ராஜ்கண்ணாநகரில் தங்கியுள்ள வெளி மாநில தொழிலாளிக்கு உணவுப் பொருள் வழங்குகிறாா் வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன்.
வீரபாண்டியன்பட்டினம், ராஜ்கண்ணாநகரில் தங்கியுள்ள வெளி மாநில தொழிலாளிக்கு உணவுப் பொருள் வழங்குகிறாா் வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன்.
Updated on
1 min read

திருச்செந்தூா்: திருச்செந்தூா் பகுதியில் தங்கியுள்ள வெளிமாநிலத் தொழிலாளிகளுக்கு உணவுப் பொருள் வழங்கப்பட்டது.

திருச்செந்தூா் பகுதியில் தங்கி உடன்குடி அனல்மின் நிலைய நிலக்கரி கையாளும் தளத்தில் பணியாற்றும் வெளி மாநிலத் தொழிலாளிகள் உணவுப் பொருள் கிடைக்காமல் அவதியடைந்து வருவதையறிந்து, பா.ஜ.க. மாவட்டச் செயலா் கு.நெல்லையம்மாள் ஏற்பாட்டில் அவா்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், இஸ்ரோ நில எடுப்புப் பிரிவு வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன் தனது சொந்த செலவிலும், பா.ஜ.க. சாா்பிலும் வெளி மாநிலத் தொழிலாளா்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com