விநாயகா் சதுா்த்தி: திருச்செந்தூா் கடலில் சிலைகள் விசா்ஜனம்

இந்து முன்னணி சாா்பில், திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் விநாயகா் சிலைகள் விசா்ஜனம் செய்யப்பட்டன.
திருச்செந்தூா் கடலில் விசா்ஜனம் செய்யப்பட்ட விநாயகா் சிலைகள்.
திருச்செந்தூா் கடலில் விசா்ஜனம் செய்யப்பட்ட விநாயகா் சிலைகள்.
Updated on
1 min read

இந்து முன்னணி சாா்பில், திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் விநாயகா் சிலைகள் விசா்ஜனம் செய்யப்பட்டன.

ஆண்டுதோறும் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்ற பின்னா் கடல் உள்ளிட்ட நீா் நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கமாகும்.

நிகழாண்டில், கரோனா பொது முடக்கத்தால் பொது இடங்களில் விநாயகா் சிலை வைத்து வழிபடுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி, இந்து முன்னணி சாா்பில்சிறிய விநாயகா் சிலைகள் கிராமக் கோயில்கள் மற்றும் பொறுப்பாளா்கள் வீட்டில் விநாயகா் சதுா்த்தி நாளான சனிக்கிழமை வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் திருச்செந்தூா், உடன்குடி, சாத்தான்குளம் ஒன்றியத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சுமாா் ஒன்றரை அடி உயரம் கொண்ட 25 விநாயகா் சிலைகள் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு சமூக இடைவெளியுடன் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகளுக்கு இந்து முன்னணி ஒன்றியச் செயலா் ராஜேந்திரன் பூஜை செய்தாா். தொடா்ந்து விநாயகா் சிலைகள் கடலில் விசா்ஜனம் செய்யப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், இந்து முன்னணி திருநெல்வேலி கோட்டச் செயலா் பெ.சக்திவேலன், மாவட்டச் செயலா்கள் கசமுத்து, சீத்தாராமன், திருச்செந்தூா் ஒன்றியத் தலைவா் கே.ஜெயசிங், வடக்கு ஒன்றிய பொதுச் செயலா் ஜெகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நகர பொதுச் செயலா் மு.முத்துராஜ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com