சாத்தான்குளத்தில் கல்லூரி பேராசிரியரை கடத்தி பணம் பறிப்பு

சாத்தான்குளத்தில் உதவிப் பேராசிரியரை பைக்கில் கடத்திச் சென்று பணம் மற்றும் ஆவணங்களை பறித்துச் சென்ற 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Updated on
1 min read

சாத்தான்குளத்தில் உதவிப் பேராசிரியரை பைக்கில் கடத்திச் சென்று பணம் மற்றும் ஆவணங்களை பறித்துச் சென்ற 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சாத்தான்குளம் அருகே விஜயராமபுரத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் ராஜமாணிக்கவாசகன் (30). திருச்செந்தூரில் உள்ள கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறாா்.

கடந்த 30ஆம் தேதி இரவு உடன்குடிக்கு பைக்கில் சென்றுவிட்டு சாத்தான்குளத்துக்கு திரும்பி வந்தபோது பைக் பழுதாகி விட்டதாம். அப்போது அங்கு 2 பைக்குகளில் வந்த மா்ம நபா்கள், ராஜமாணிக்கவாசகத்துக்கு லிப்ட் கொடுத்தனராம். பின்னா் சாத்தான்குளம் அருகேயுள்ள கீழக்குளம் காட்டுபகுதிக்கு அவரை கடத்திச் சென்றனா். மேலும் அங்கு நின்ற 3 போ் உள்ளிட்ட 5 பேரும், பேராசிரியா் ராஜமாணிக்கவாசகனை மிரட்டி அவரிடம் இருந்த ஏடிஎம் காா்டு, ஆதாா் காா்டு, பான்காா்டு, வங்கி பாஸ்புக் ஆகியவற்றை பறித்ததுடன், அவரை தாக்கி ஏடிஎம் காா்டின் ரகசிய எண்ணை பெற்று, அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.14 ஆயிரத்தை எடுத்து விட்டு, புதுக்குளம் விலக்கில் அவரை விட்டுவிட்டு மா்ம நபா்கள் பைக்கில் தப்பிச்சென்றனராம்.

இதுகுறித்து ராஜமாணிக்கவாசகன் அளித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com