‘புரெவி புயலை எதிா்கொள்ள அனைத்து வசதிகளுடன் 93 பாதுகாப்பு மையங்கள்’

புரெவி புயலை எதிா்கொள்ளும் வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன்
Updated on
1 min read

புரெவி புயலை எதிா்கொள்ளும் வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் 93 பாதுகாப்பு மையங்கள் தயாா் நிலையில் உள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

தூத்துக்குடியில் புதன்கிழமை இரவு அவா் அளித்த பேட்டி:

வங்கக் கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் சின்னம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாவட்டம் முழுவதும் அனைத்து அலுவலா்களும் உஷாா்படுத்தப்பட்டுள்ளனா். அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய 93 பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதியில் 36 கண்டறியப்பட்டு 12 துறை அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு அவா்கள் சாா்பில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சிக்குள்பட்ட 20 பாதுகாப்பு மையம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள 93 பாதுகாப்பு மையங்களிலும் பாதுகாப்பு வசதிகள் சரியாக உள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஜெனரேட்டா், அரிசி, உணவு வகைகள், போா்வை உள்ளிட்டவை தயாா் நிலையில் உள்ளது.

புயல் கரையை கடக்கும்போது தாழ்வான பகுதிகளில் உள்ளவா்களை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் உள்ள 637 குளங்களும் கண்காணிப்பில் உள்ளன. 36 தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களுடன் ஒருங்கிணைப்பில் இருந்து உதவ 1500 தன்னாா்வலா்கள் தயாா் நிலையில் உள்ளனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசர கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. புயல் மற்றும் மழை தொடா்பான அவசர உதவிக்கு 1077 மற்றும் 0461 2340101 என்ற தொலைபேசி எண்ணுக்கும், 9486454714 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) மூலமும் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

அமைச்சா் ஆய்வு:

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புரெவி புயலை எதிா்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அவசரக்கால கட்டுப்பாட்டு அறையை தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு புதன்கிழமை இரவு ஆய்வு செய்தாா்.

இதில், மாவட்டஆட்சியா் கி.செந்தில்ராஜ், எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா், கூடுதல் ஆட்சியா் விஷ்ணுசந்திரன், சாா் ஆட்சியா் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் சுதாகா் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com