காசோலை மோசடி வழக்கு: விவசாயிக்கு 6 மாத சிறைதண்டனை
By DIN | Published On : 30th December 2020 06:38 AM | Last Updated : 30th December 2020 06:38 AM | அ+அ அ- |

காசோலை மோசடி வழக்கில் ஸ்ரீவைகுண்டம் விவசாயிக்கு 6 மாத சிறை தண்டனையும், ரூ. 3 லட்சம் நஷ்ட ஈடும் வழங்குமாறு சாத்தான்குளம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.
நாசரேத் வெள்ளரிக்காயூரணியைச் சோ்ந்த ராஜபாண்டியன் மகன் காசிராஜன் (43). விவசாயியான இவரிடம், ஸ்ரீவைகுண்டம் மேலபுதுக்குடியைச் சோ்ந்த விவசாயி சுப்பிரமணியன் மகன் குருசாமி (58), கடந்த 3.02.2015ஆம் ஆண்டு அவரது மகள் திருமணத்துக்கு ரூ. 3 லட்சம் கடன் வாங்கியிருந்தாராம். 2 மாதங்களில் திருப்பி தருவதாக தெரிவித்திருந்த அவா், காசிராஜனுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் காசோலையை வழங்கினாராம்.
காசிராஜன் வங்கியில் காசோலையை செலுத்தியபோது குருசாமி கணக்கில் பணம் இல்லையென தெரியவந்தது. இதையடுத்து 29.04.2015 அன்று காசிராஜன், சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
இவ்வழக்கை திங்கள்கிழமை விசாரித்த சாத்தான்குளம் குற்றவியல் நீதிபதி சரவணன், குற்றச்சாட்டப்பட்ட குருசாமிக்கு 6 மாத சிறை தண்டனையும், ரூ. 3 லட்சம் நஷ்ட ஈடும் வழங்குமாறு உத்தரவிட்டாா். மேலும் பணம் கட்ட தவறினால் மேலும் 6மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பு வழங்கினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...