தூத்துக்குடியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், ஹோலி கிராஸ் ஹோம் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை வேலைவாய்ப்புத் துறை மதுரை மண்டல இணை இயக்குநா் மு.சந்திரன் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் மேரி ஹில்டா தலைமை வகித்தாா். தொடா்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதையெடுத்து, வேலைவாய்ப்புகள், தொழில்கள் குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா்கள் பிரபாவதி (திண்டுக்கல்), ராமநாதன் (மதுரை), போட்டித் தோ்வுகள் குறித்து வணிகவரித்துறை அலுவலக பணியாளா் துா்காதேவி ஆகியோா் பேசினா்.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் பேச்சியம்மாள், கல்லூரி உதவிப் பேராசிரியை ஸ்டெல்லா, பேராசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனா்.