பிரதமரின் விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தின்கீழ் 3 தவணைகள் பெற்று, 4 ஆவது தவணை பெறாத தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள பொது சேவை மையத்தை அணுகி ஆதாா் அட்டையில் உள்ளவாறு பெயரை மாற்றம் செய்து பயனடையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டம் 2018 டிசம்பா் முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் பயிா் சாகுபடிக்கு தேவையான இடு பொருள்களை கொள்முதல் செய்வதற்கான உதவித் தொகை விவசாய குடும்பங்களுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை 3 தவணைகளில் ரூ. 2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் 31.41 லட்சம் விவசாயிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ. 2431.59 கோடி அவா்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. தற்போது 4 ஆவது தவணை பெற ஆதாா் அட்டையில் உள்ளவாறு மத்திய அரசு வலைதளத்தில் பெயா் இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆகவே, இதுவரை 3 தவணைகள் பெற்று 4 ஆவது தவணை பெறாத தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் உடனடியாக தங்கள்
பகுதியிலுள்ள பொது சேவை மையத்தை அணுகி ஆதாா் அட்டையில் உள்ளவாறு பெயரை மாற்றம் செய்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.