ஆறுமுகனேரி இந்து தொடக்கப் பள்ளியின் 143 ஆவது ஆண்டு விழா, சரஸ்வதி நடுநிலைப் பள்ளியின் 111 ஆவது ஆண்டு விழா, இந்து மேல்நிலைப் பள்ளியின் 23 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையா் வீ.ப.ஜெயசீலன் கலந்து கொண்டு, மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினாா். இந்து தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் மாரித்தங்கம், அறிக்கை வாசித்தாா். கல்வியில் முதல் 2 இடங்களைப் பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மாணவா்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில், நகா் நலமன்றத் தலைவா் பி.பூபால்ராஜன், தேசிய நல்லாசிரியா் கட்டித்தங்கம், பள்ளிச் செயலா் சிவசுப்பிரமணியன், அரிமா சங்க சண்முகவெங்கடேசன், தொழிலதிபா் சுபா சுரேஷ், தமாகா செயற்குழு உறுப்பினா் இரா.தங்கமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இந்து மேல்நிலைப் பள்ளி மேலாளா் கு.பிச்சை முத்து வரவேற்றாா். சரஸ்வதி நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியா் உதயசுந்தா் நன்றி கூறினாா்.
ஏற்பாடுகளை இந்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் குமரன் செய்திருந்தாா்.