நாகலாபுரம் கல்லூரியில் ரத்த தான முகாம்

இந்திய செஞ்சிலுவைச் சங்க நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாகலாபுரத்தில் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக கலை அறிவியல் கல்லூரியில் ரத்த தான முகாம், மருத்துவ முகாம் நடைபெற்றது.
Updated on
1 min read

இந்திய செஞ்சிலுவைச் சங்க நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாகலாபுரத்தில் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக கலை அறிவியல் கல்லூரியில் ரத்த தான முகாம், மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு, கல்லூரி முதல்வா் இரா. சாந்தகுமாரி தலைமை வகித்தாா். இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்டத் தலைவா் மருத்துவா் வசீகரன், செயலா் முத்துராஜ், புதூா் வட்டார மருத்துவ அலுவலா் ரவீந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

செஞ்சிலுவை சங்கத்தின் செயல் திட்டங்கள் குறித்து செஞ்சிலுவை சங்க பிரதிநிதிகள், மருத்துவா்கள் பேசினா்.

கல்லூரி மாணவா், மாணவிகள் 100 போ் ரத்த தானம் செய்தனா்.

கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள், அலுவலக பணியாளா்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில், பேராசிரியா்கள் மகேஷ், அய்யனாா், விவேக லதா, ராஜா சங்கா், தமிழ்செல்வன், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினா் கலந்துகொண்டனா்.

இளையோா் செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலா் கருப்பசாமி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com