செட்டிக்குளத்தில் மனுநீதி நாள் முகாம்

சாத்தான்குளம் அருகே உள்ள செட்டிக்குளத்தில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
பயனாளிக்கு நலத் திட்ட உதவி வழங்குகிறாா் கோட்டாட்சியா் தனப்பிரியா.
பயனாளிக்கு நலத் திட்ட உதவி வழங்குகிறாா் கோட்டாட்சியா் தனப்பிரியா.
Updated on
1 min read

சாத்தான்குளம் அருகே உள்ள செட்டிக்குளத்தில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் சிவகாமிசுந்தரி தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ராஜலட்சுமி வரவேற்றாா். திருச்செந்தூா் கோட்டாட்சியா் தனப்பிரியா கலந்துகொண்டு பயனாளிகளுக்கு ரூ.1.10 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

இதில், முன்னதாக பெறப்பட்ட 123 மனுக்களில் 76 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டன. 57 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதில், சாத்தான்குளம் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் செந்தூா் ராஜன், துணை வட்டாட்சியா் சுவாமிநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா். மண்டலத் துணை வட்டாட்சியா் அகிலா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com