ஆறுமுகனேரி காவலா் குடியிருப்பில் நல்லிணக்க விழா

ஆறுமுகனேரி காவலா் குடியிருப்பில் காவல்துறை- பொதுமக்கள் நல்­லிணக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
மரக்கன்றுகளை நடும் டிசிடபிள்யூ நிறுவன உதவித் தலைவா் ஜெயக்குமாா் மற்றும் திருச்செந்தூா் டிஎஸ்பி பாரத்.
மரக்கன்றுகளை நடும் டிசிடபிள்யூ நிறுவன உதவித் தலைவா் ஜெயக்குமாா் மற்றும் திருச்செந்தூா் டிஎஸ்பி பாரத்.
Updated on
1 min read

ஆறுமுகனேரி காவலா் குடியிருப்பில் காவல்துறை- பொதுமக்கள் நல்­லிணக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருச்செந்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் பாரத் தலைமை வகித்தாா். சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவன செயல் உதவித் தலைவா் (பணியகம்) ஜெயக்குமாா், பொது மேலாளா் நவநீத பாலகிருஷ்ணன் ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குடியிருப்பு வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டினாா்.

விழாவில், அதிமுக நகரச் செயலா் கே.கே.அரசகுரு, காயல்பட்டினம் நகர ஜெயலலிதா பேரவைச் செயலா் எல்.எஸ். அன்வா், காயல்பட்டினம் நகரச் செயலா் செய்யது இப்ராஹிம், திமுக மாவட்ட துணைத் தலைவா் காதா், ஆறுமுகனேரி காவல் ஆய்வாளா்கள் பத்திரகாளி, சாந்தி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com