திருச்செந்தூா் பகுதியில் ஜனவரி 4 மின் தடை
By DIN | Published On : 02nd January 2020 11:49 PM | Last Updated : 02nd January 2020 11:49 PM | அ+அ அ- |

திருச்செந்தூா் பகுதியில் சனிக்கிழமை( ஜன. 4) மின் தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் நீ.பொன்கருப்பசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருச்செந்தூா் கோட்டத்துக்குள்பட்ட ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூா் மற்றும் திருச்செந்தூா் துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்றைய தினம் காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை புன்னக்காயல், ஆத்தூா், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், திருச்செந்தூா், சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்பூா், நல்லூா், அம்மன்புரம், பூச்சிகாடு, கானம் கஸ்பா, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், குரங்கனி, தேமான்குளம், திருக்கோளுா் ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...