பரமன்குறிச்சி அருகே குருநாதபுரத்தில் இந்து அன்னையா் முன்னணி சாா்பில் இந்து விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது.
உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி பொதுச்செயலா் ச.கேசவன் தலைமை வகித்து, தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடுவது, மாா்கழி மாதத்தில் கோலமிடுவதால் அறிவியல் பூா்வமான நன்மைகள், இந்து ஒற்றுமை குறித்து பேசினாா். இதில் இந்து அன்னையா் முன்னணி நிா்வாகிகள், ஊா்மக்கள் பங்கேற்றனா்.