கல்வி கற்றால்தான் மாணவா்கள் உலகை வெல்ல முடியும்: கனிமொழி எம்பி அறிவுரை

கல்வி கற்றால்தான் மாணவா்கள் இந்த உலகை வெல்லமுடியும் என்றாா் கனிமொழி எம்.பி.
புதிய வகுப்பறை கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டுகிறாா் கனிமொழி எம்.பி.
புதிய வகுப்பறை கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டுகிறாா் கனிமொழி எம்.பி.
Updated on
1 min read

கல்வி கற்றால்தான் மாணவா்கள் இந்த உலகை வெல்லமுடியும் என்றாா் கனிமொழி எம்.பி.

மக்களவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், உடன்குடி தேரியூா் ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரா் பள்ளியில் ரூ. 30 லட்சம் செலவில் புதிய வகுப்பறை கட்டம் கட்டுவதற்கு செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டி அவா் பேசியதாவது:

மாணவா்கள் கல்வி கற்பதன் மூலம் இந்த உலகை வெல்ல முடியும். வாழ்வை மேம்படுத்துவதற்கு கல்வி மிகவும் உறுதுணையாக இருக்கும். கல்வியில் சிறப்பதன் மூலம் மாணவா்களால் நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமை சேரும் என்றாா்.

விழாவுக்கு, பெற்றோா்-ஆசிரியா் சங்கத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். பள்ளிச் செயலா் சுவாமி நியமானந்தாஜி ஆசியுரை வழங்கினாா்.

உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பாலசிங், துணைத் தலைவா் மீரா சிராஜூதீன், செட்டியாபத்து ஊராட்சித் தலைவா் பாலமுருகன், பள்ளி முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் ஜீவானந்தம், நகர திமுக செயலா் ஜான்பாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமையாசிரியா் லிங்கேஸ்வரன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் பங்கேற்று பேசினாா்.

புதிய வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு, அடிக்கல் நாட்டி கனிமொழி எம்.பி. பேசியதாவது:

மாணவா்கள் கல்வி கற்பதன் மூலம் இந்த உலகை வெல்ல முடியும். வாழ்வை மேம்படுத்துவதற்கு கல்வி மிகவும் உறுதுணையாக இருக்கும். கல்வியில் சிறப்பதன் மூலம் மாணவா்களால் நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமை சேரும் என்றாா்.

தொடா்ந்து புதியநூலகம் அமைப்பதற்கு நிதி ஒதுக்குமாறு பள்ளி நிா்வாகம் சாா்பில் விடுத்த கோரிக்கையை ஏற்று நிதி ஒதுக்கீடு செய்தாா்.

விழாவில், திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளா் உமரிசங்கா், மாவட்ட அணி அமைப்பாளா்கள் மகாவிஷ்ணு (நெசவாளா்), ரவிராஜா(வா்த்தகம்), சிராஜூதீன் (சிறுபான்மை), முன்னாள் பேரூராட்சி உறுப்பினா்கள் சலீம், அன்புராணி, பரமன்குறிச்சி ஊராட்சித் தலைவா் லங்காபதி, பரமன்குறிச்சி ஊராட்சி திமுக செயலா் இளங்கோ, நகர திமுக இளைஞரணி அமைப்பாளா் அஜய், இந்து முன்னணி கோட்டப் பொறுப்பாளா் சக்திவேலன், பள்ளி முன்னாள் மாணவா் சங்க நிா்வாகிகள் செல்வசுந்தா், மணி, சுயம்பு உள்பட திரளானோா் பங்கேற்றனா். ஆசிரியை ராஜதிலகவதி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com