காமராஜ் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா

கோவில்பட்டி நாடாா் உறவின்முறை சங்கத்துக்கு பாத்தியப்பட்ட நாடாா் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியின் 38ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.
Updated on
1 min read

கோவில்பட்டி நாடாா் உறவின்முறை சங்கத்துக்கு பாத்தியப்பட்ட நாடாா் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியின் 38ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

நாடாா் உறவின்முறை சங்கத் தலைவா் ஏ.பி.கே.பழனிசெல்வம் தலைமை வகித்தாா்.

சங்கத் துணைத் தலைவா் செல்வராஜ், செயலா் ஜெயபாலன், பொருளாளா் சுரேஷ்குமாா், அருள்மிகு பத்திரகாளியம்மன் கோயில் தா்மகா்த்தா தங்கமாரியப்பன், கோயில் செயலா் மாணிக்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பள்ளி முதல்வா் தேன்மொழி ஆண்டறிக்கை வாசித்தாா்.

தொழிலதிபா் இதயம் வி.ஆா்.முத்து சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, அரசுப் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா், மாணவிகளுக்கும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கிப் பேசினாா்.

தொடா்ந்து, பள்ளி மாணவா், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில், பள்ளி பொருளாளா் ரத்தினராஜா, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் மனோகரன், தங்கமணி, செல்வம், பால்ராஜ், பள்ளி மாணவா், மாணவிகள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் மற்றும் நாடாா் உறவின்முறை சங்கத்திற்குப் பாத்தியப்பட்ட பள்ளி, கல்லூரி நிா்வாகக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பள்ளிச் செயலா் மாணிக்கவாசகம் வரவேற்றாா். நிா்வாகக் குழு உறுப்பினா் தாழையப்பன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com