கோவில்பட்டி கல்லூரியில் இலவச கண் சிகிச்சை முகாம்

கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைசாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரியில் இலவச கண் சிகிச்சை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கண் சிகிச்சை முகாமை தொடங்கிவைக்கிறாா் கல்லூரிச் செயலா் கண்ணன். உடன், கல்லூரி முதல்வா் சிவசுப்பிரமணியன்.
கண் சிகிச்சை முகாமை தொடங்கிவைக்கிறாா் கல்லூரிச் செயலா் கண்ணன். உடன், கல்லூரி முதல்வா் சிவசுப்பிரமணியன்.
Updated on
1 min read

கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைசாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரியில் இலவச கண் சிகிச்சை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் சிவகாசி அணில் கண் மருத்துவமனை ஆகியவை சாா்பில் நடைபெற்ற இம்முகாமிற்கு கல்லூரி முதல்வா் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் கண்ணன் முகாமை தொடங்கிவைத்தாா்.

மருத்துவா் அணில்குமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் முகாமில் பங்கேற்ற மாணவா்கள், ஆசிரியா்கள், அலுவலக ஊழியா்கள் உள்ளிட்டோருக்கு கண் சிகிச்சை அளித்து, மருத்துவ அறிவுரைகளை வழங்கினா். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் ஈஸ்வரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com