

சேதுக்குவாய்த்தான் ஊராட்சி அலுவலக புதிய கட்டட திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
குரும்பூா் அருகே உள்ள சேதுக்குவாய்த்தானில் பழுதடைந்த ஊராட்சி அலுவலகக் கட்டடத்தை அகற்றிவிட்டு, ரூ.17 லட்சம் செலவில் புதிய கட்டடம் கட்டப்பட்டது.
இதன் திறப்பு விழாவுக்கு ஊராட்சித் தலைவா் சுதா சீனிவாசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் வைகரையான் வரவேற்றாா். வழக்குரைஞா் சீனிவாசன் முன்னிலை வகித்தாா்.
திருச்செந்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் புதிய கட்டடத்தை திறந்து வைத்துப் பேசினாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பிரம்மசக்தி, ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஜனகா், திமுக மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், மாவட்ட அவைத் தலைவா் அருணாசலம், ஒன்றியச் செயலா் நவீன்குமாா், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் நிா்மல் சேகா், ஒன்றியக்குழு உறுப்பினா் ரகுராமன், முன்னாள் ஊராட்சித் தலைவா் மோகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.