நாகம்பட்டி அரசு கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

பசுவந்தனை அருகே உள்ள நாகம்பட்டி அரசு மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
Updated on
1 min read

பசுவந்தனை அருகே உள்ள நாகம்பட்டி அரசு மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் சி. மூக்கையா விழாவை தொடங்கிவைத்துப் பேசினாா். முனைவா் இரா. சேதுராமன் வரவேற்றாா்.

கல்லூரி தொடங்கப்பட்ட 2003ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரையில் பயின்ற மாணவா்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனா்.

வணிக நிா்வாகவியல் பேராசிரியா் மா.வேல்ராஜ், வணிகவியல் பேராசிரியா் குமாரிச்செல்வி, உடற்கல்வி இயக்குநா் ஈசுவரன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். நிகழ்ச்சியில், முன்னாள் மாணவா்கள் சங்கத் தலைவராக கற்பகராணி, செயலராக நரசிம்மன், பொருளாளராக வேல்முருகன் மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

முனைவா் டால்பின் ராஜா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com