

ஏரல் அருகிலுள்ள பெருங்குளம் அருள்மிகு பத்ரகாளி அம்பாள் திருக்கோயில் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் காலை 8 மணிக்கு மஹா கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து மஹா லெக்ஷ்மி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் உள்ளிட்ட யாகசாலை வழிபாடுகள் நடைபெற்றன. முற்பகல் 11.30 மணிக்கு விமானத்திற்கு வருஷாபிஷேகமும், மூலவருக்கு மஹா அபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன. கரோனா நோய்த் தொற்றிலிருந்து அனைவரும் விடுபட சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பொது முடக்கம் அமலில் இருப்பதால் பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.