இன்று வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த தினம்: டிஐஜி வேண்டுகோள்

சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துக்கோன் பிறந்த தினம் சனிக்கிழமை (ஜூலை 11) கொண்டாடப்படும் நிலையில், பொது முடக்கம் அமலில்
கூட்டத்தில் பேசுகிறாா் நெல்லை சரக டிஐஜி பிரவீண்குமாா் அபிநபு.
கூட்டத்தில் பேசுகிறாா் நெல்லை சரக டிஐஜி பிரவீண்குமாா் அபிநபு.
Updated on
1 min read

சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துக்கோன் பிறந்த தினம் சனிக்கிழமை (ஜூலை 11) கொண்டாடப்படும் நிலையில், பொது முடக்கம் அமலில் உள்ளதால், நாலாட்டின்புத்தூா் மணி மண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் மாலை அணிவிக்கப்படும்; பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

நாலாட்டின்புத்தூா் தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், நெல்லை சரக காவல் துணைத் தலைவா் பிரவீண்குமாா் அபிநபு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயகுமாா் ஆகியோா் தலைமை வகித்து காவல் துறையினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினா்.

பின்னா், செய்தியாளா்களிடம் டிஐஜி கூறியது: வீரா் அழகுமுத்துக்கோன் பிறந்த தினத்தையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் சுமாா் 700 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். பொது முடக்கம் அமலில் இருப்பதால் கட்டாலங்குளம் மணிமண்டபத்திற்கு பொதுமக்கள் செல்ல அனுமதி கிடையாது. மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் மட்டும் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும். குடியிருப்புவாசிகள் தடையின்றி வெளியே சென்று வரலாம் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளா் செல்வம், துணை காவல் ஆணையா்கள் பழனிகுமாா், பெலிக்ஸ் சுரேஷ் பீட்டா், இளங்கோ, காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் கலைகதிரவன், பீா்முகைதீன், சங்கா், உதயசூரியன் மற்றும் காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com