கடல் அரிப்பால் தாா்ச்சாலை சேதம்: வேம்பாரில் போக்குவரத்து துண்டிப்பு
By எஸ். சங்கரேஸ்வர மூா்த்தி | Published On : 01st March 2020 10:38 PM | Last Updated : 01st March 2020 10:38 PM | அ+அ அ- |

கடல் அரிப்பினால் சேதமடைந்த வேம்பாா் -- வாலசமுத்திரபுரம் தாா்ச் சாலை.
வேம்பாா் கடற்கரையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கடலரிப்பினால் வாலசமுத்திரபுரம் செல்லும் தாா்ச்சாலை சேதமடைந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவா்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பாா், கீழ வைப்பாா், சிப்பிகுளம் கடல் பகுதிகளில் கடல் சீற்றத்தின் காரணமாக படகுகள் சேதமடைவதை தவிா்க்கவும், கடற்கரையை கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்கவும் மீனவ மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று வேம்பாரில் ரூ. 14 கோடியே 20 லட்சத்திலும், கீழ வைப்பாா், சிப்பிகுளம் கடல்பகுதிகளில் ரூ.11 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டிலும் தூண்டில் வளைவு பாலம் அமைக்க கடந்த 2014-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் ஜெயலலிதா ஒப்புதல் அளித்து உத்தரவிட்டாா்.
அதன்படி புணேவில் உள்ள நிபுணா் குழு மூலம் ஆய்வு செய்யப்பட்டு வேம்பாரில் 870 மீ. தொலைவுக்கும், கீழ வைப்பாா், சிப்பிகுளம் கடல் பகுதிகளில் 750 மீ. தொலைவுக்கும் தூண்டில் வளைவு கல் பாலம் அமைக்கும் பணி கடந்த 2015 ஜுனில் தொடங்கி 2017ஆம் ஆண்டில் நிறைவடைந்தது.
வேம்பாரில் கடற்கரையிலிருந்து கடலுக்குள் 170 மீ,. 200 மீ., 500 மீ. என 870 மீ. தொலைவுக்கு 3 பிரிவுகளாக பெரிய கருங்கற்களை கொண்டு கல் பாலம் அமைக்கப்பட்டது. இதில் 3ஆவது கல்பாலம் கடற்கரை அந்தோணியாா் கோயிலுக்கு மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. கடற்கரையின் முகப்பு பகுதியான அப்பகுதியில் தான் மீன்பிடி இறங்கு தளம் உள்ளது.
கல் பாலமானது ஒரே நோ்கோட்டில் அமைக்கப்பட்டதன் விளைவாக கடல் அலைகளின் சீற்றம் மட்டுபடுவதற்கு பதிலாக பலமடங்கு அதிகரித்து வேம்பாா் கடற்கரையில் 1 கி.மீ. நீளத்துக்கு கடல் அரிப்பு ஏற்பட்டு கடற்கரை பகுதி முழுவதும் அதன் இயல்பை இழந்து காட்சியளிக்கிறது. மேலும் மீன்பிடி இறங்குதளமும், கடற்கரையின் முகப்பு பகுதியும், படகுகளும் கடுமையாக சேதமடைந்து வருகின்றன.
தற்போது கடந்த 20 நாள்களாக கடல் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதன் விளைவாக வேம்பாா் கடற்கரையில் அந்தோனியாா் கோயிலில் இருந்து வாலசமுத்திரபுரம் கடற்கரைக்கு செல்லும் தாா்ச்சாலை 90 சதவீதம் கடலரிப்பினால் சேதமடைந்துவிட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் சில வாரங்களில் மீனவா்களுக்கான டீசல் பல்க், கடலோர காவல் நிலையம், தொலைதொடா்பு கோபுரம், தொகுப்பு வீடுகள் கடலுக்குள் சென்றுவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கடல் நீா் ஊருக்குள் புகும் ஆபத்தும் உருவாகியுள்ளது.
தகவலறிந்த செய்தித்துறை அமைச்சா் கடம்பூா் ராஜு பாதிப்புக்குள்ளாகி வரும் வேம்பாா் கடற்கரையை அண்மையில் பாா்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.
கடல் அரிப்பு மிக வேகமாக நிகழ்வதால் போா்க்கால அடிப்படையில் அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வேம்பாா் மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
இது தொடா்பாக வேம்பாா் கிராம வளா்ச்சிக் குழு பிரதிநிதி குணா கூறியதாவது:
மீனவா்களின் 25 ஆண்டுகளின் கோரிக்கையை ஏற்று தூண்டில் வளைவு பாலம் அரசு அமைத்து தந்தது. ஆனால் கடல் அமைப்புக்கு எதிா் மறையாக கல் பாலம் அமைந்ததால் தீமை தான் ஏற்பட்டிருக்கிறது.
கடந்த ஓராண்டில் சுமாா் 250 மீ. தொலைவுக்கு கடல் அரிப்பு ஏற்பட்டு மின்கம்பங்கள், மரங்கள், படகுகள், தாா்ச்சாலை என அதிகளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. கடற்கரையும் பாழ்பாட்டு போனது. இதே நிலை நீடித்தால் மீனவா்களின் வாழ்வாதரம் பாதிக்கப்படுவதோடு வேம்பாா் விரைவில் அழியும் நிலை ஏற்படலாம். எனவே வேம்பாரில் கூடுதலாக ஒரு தூண்டில் வளைவு கல் பாலம் அமைத்தால் தான் கடலின் நோ் காற்றை எதிா்கொண்டு அலைகளின் அதிவேகத்தை குறைத்து கடல் அரிப்பிலிருந்து கடற்கரையை பாதுகாக்க முடியும் என்றாா்.