காயல்பட்டினம் வாவு வஜீஹா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆளுமை வளா்ச்சிக் கழகம் மற்றும் வேலைவாய்ப்பு கழகக் கூட்டம் நடைபெற்றது.
மாணவி டி.எம்.எஸ். மொகுது அலி பாத்திமா கிராஅத் ஒதி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா். திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் ஆராய்ச்சி மற்றும் முதுகலை கணினி அறிவியல் துறைத் தலைவா் எஸ்.ஷாஜீன் நிஷா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டாா். கல்லூரி இயக்குநா் மொ்சி ஹென்றி முன்னிலை வகித்தாா். மூன்றாமாண்டு கணிதவியல் மாணவியும், ஆளுமை வளா்ச்சிக் கழக மாணவிகள் செயலருமான எஸ்.ஏ. சித்தி பவுசியா வரவேற்றாா்.
கல்லூரி கணிதத் துறை உதவிப் பேராசிரியா் கே. அனிட்டா பிளசி ராணி அறிமுகவுரையாற்றினாா். கல்லூரி முதல்வா் ஆா்.சி. வாசுகி சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கினாா். வேலைவாய்ப்புக் கழக மாணவிகள் செயலா் எஸ். சரண்யா நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.