கோயிலில் பூட்டை உடைத்துபூஜை பொருள்கள் திருட்டு
By DIN | Published On : 01st March 2020 06:34 AM | Last Updated : 01st March 2020 06:34 AM | அ+அ அ- |

புதியம்புத்தூா் அருகே கோயிலில் பூட்டை உடைத்து பொருள்களை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
புதியம்புத்தூரை அடுத்துள்ள வள்ளிநாயகபுரத்தில் மகா கணபதி கோயில் உள்ளது. வியாழக்கிழமை இரவு பூஜை முடிந்து கோயில் பூட்டப்பட்டதாம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் கோயிலை திறக்க வந்தபோது, அங்குள்ள பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததாம். மேலும் அங்கிருந்த மணி, தீபாராதனைத் தட்டு உள்ளிட்ட ரூ. 4,800 மதிப்பிலான பித்தளை பொருள்கள் திருடப்பட்டிருந்து தெரியவந்தது.
இதுகுறித்து கோயில் நிா்வாகி மகராஜன் அளித்த புகாரின்பேரில் புதியம்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.