குரும்பூா் பகுதியில் 22 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழி (பிளாஸ்டிக்) பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆழ்வாா்திருநகரி மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் நயினாா் தலைமையில் குரும்பூா் பகுதி கடைகளில் சோதனை நடைபெற்றது. இந்தப் பணியில் ஊராட்சி செயலா்கள் நாலுமாவடி வெள்ளைத்துரை, அங்கமங்கலம் கிருஷ்ணம்மாள், கச்சனாவிளை பா்னபாஸ், மூக்குப்பீறி வேதமாணிக்கம், கடையனோடை சாமுவேல், சேதுக்குவாய்த்தான் மாரிராஜ், குருகாட்டூா் சண்முகசுந்தரம் ஆகியோா் ஈடுபட்டனா். அப்போது , 22 கிலோ நெகிழிப் பைகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. தொடா்ந்து தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் வைத்திருந்த கடைகளின் உரிமையாளா்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.