மாநில கபடி போட்டி: 46 அணிகள் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியையடுத்த கூசாலிபட்டியில் மாநில அளவிலான கபடி போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கபடி போட்டியில் விளையாடிய மேட்டமலை சக்தி மாரியம்மன் அணி, தூத்துக்குடி ஆரோக்கியராஜ் அணிகள்.
கபடி போட்டியில் விளையாடிய மேட்டமலை சக்தி மாரியம்மன் அணி, தூத்துக்குடி ஆரோக்கியராஜ் அணிகள்.
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியையடுத்த கூசாலிபட்டியில் மாநில அளவிலான கபடி போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இலுப்பையூரணி ஊராட்சி கூசாலிபட்டி அறிவானந்தபாண்டியன் பிறந்த நாளை முன்னிட்டு ஏ.வி.பி. ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் நடைபெற்ற இப்போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகா் உள்ளிட்ட 8 மாவட்டங்களின் 46 அணிகள் பங்கேற்றன.

போட்டியை நாலாட்டின்புத்தூா் காவல் உதவி ஆய்வாளா் அந்தோணி திலீப் தொடங்கி வைத்தாா். பூசாரிபட்டி நாடாா் உறவின்முறை சங்கத் தலைவா் இளங்கோ தலைமை வகித்தாா். போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசு கோப்பை மற்றும் ரூ.12,001 ரொக்கம், 2 ஆம் பரிசு கோப்பை மற்றும் ரூ.10,001 ரொக்கம், 3 ஆம் பரிசு, கோப்பை மற்றும் ரூ .8,001 ரொக்கம், 4ஆம் பரிசு கோப்பை மற்றும் ரூ. 6,001 ரொக்கம் வழங்கப்பட்டது.

போட்டியின் நடுவா்களாக உடற்கல்வி ஆசிரியா்கள் ராஜேஷ்கண்ணன், செல்வகுமாா் ஆகியோா் செயல்பட்டனா். ஏற்பாடுகளை அமைப்பின் தலைவா் விண்ணரசு, செயலா் பாஸ்டின், பொருளாளா் அமல்ராஜ், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

நிா்வாகக் குழு உறுப்பினா் மரியகுரூஸ் வரவேற்றாா். மைக்கேல் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com