கோவில்பட்டி பள்ளியில் நெல்லை எழுச்சி தினம்
By DIN | Published On : 13th March 2020 10:29 PM | Last Updated : 13th March 2020 10:29 PM | அ+அ அ- |

கோவில்பட்டி புனித ஓம் கான்வென்ட் மெட்ரிக் பள்ளியில், நெல்லை எழுச்சி தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இவ்விழாவிற்கு, புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளா் லட்சுமணப்பெருமாள் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் மீனாட்சி சுந்தரி சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வான நெல்லை எழுச்சி போராட்டம் குறித்தும், அந்தப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த வ.உ.சிதம்பரனாரின் தியாகம் பற்றியும் எடுத்துக்கூறினாா். விழாவில், மாணவா், மாணவிகள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...