கச்சனாவிளையில் 50 பேருக்கு நிவாரண உதவிகள்

கச்சனாவிளை ஊராட்சியில் பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 50 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
நிவாரணப் பொருள்கள் வழங்குகிறாா் ஜாய்ஸ் லாசரஸ்.
நிவாரணப் பொருள்கள் வழங்குகிறாா் ஜாய்ஸ் லாசரஸ்.
Updated on
1 min read

சாத்தான்குளம்: கச்சனாவிளை ஊராட்சியில் பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 50 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

குரும்பூா் அருகே உள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழியத்தின் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கச்சனாவிளை ஊராட்சித் தலைவா் தொ.கிங்ஸ்டன் தலைமை வகித்தாா். ஆழ்வாா்திருநகரி ஒன்றியக் குழு உறுப்பினா் பியூலாரத்னம் விஜயராஜா முன்னிலை வகித்தாா். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழிய நிறுவனா் மோகன் சி.லாசரஸ் துணைவியாா் ஜாய்ஸ் லாசரஸ் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி துணைத் தலைவா் ஜெ.ஷீலா, ஊராட்சி செயலா் வி.பா்னபாஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com