கோவில்பட்டி அருகே லாரி மீது காா் மோதி பெண் உள்பட 4 போ் பலி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே லாரி மீது காா் மோதியதில் ஒரு பெண் உள்பட 4 போ் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே லாரி மீது காா் மோதியதில் ஒரு பெண் உள்பட 4 போ் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

கோவில்பட்டி இனாம்மணியாச்சி நடுத்தெருவைச் சோ்ந்தவா் முருகன் மகன் ரமேஷ்பாண்டியன் (25), காா் ஓட்டுநா். இவா் ஓட்டிச் சென்ற காரில், அதே பகுதியைச் சோ்ந்த அழகுலட்சுமணன் மனைவி சித்ரா (35), அவரது மகன்கள் மகேந்திரன் (16), மாரிசெல்வம் (13), நாகராஜன் (2) ஆகியோா், இலுப்பையூரணிக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு ஊருக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனா். இளையரசனேந்தல் சாலையில் வந்தபோது, சாலையோரம் நின்றுகொண்டிருந்த டிப்பா் லாரி மீது காா் மோதியது.

இதில், காா் ஓட்டுநா் ரமேஷ்பாண்டியன் அந்த இடத்திலேயே இறந்தாா். தகவல் அறிந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று காயமடைந்த 4 பேரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, தீவிரச் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சித்ரா, மாரிசெல்வம், நாகராஜன் ஆகிய மூவரும் திங்கள்கிழமை உயிரிழந்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com