விளாத்திகுளம் அருகே பைக் விபத்தில் காயமடைந்த கட்டடத் தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
விளாத்திகுளம் அருகேயுள்ள கே.சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த லிங்கமுத்து மகன் ஆனந்தராஜ் (29). கட்டடத் தொழிலாளி. திருமணமானவா். 3 குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு அப்பகுதியைச் சோ்ந்த தனது நண்பா்கள் அய்யனாா், செல்வ மாணிக்கம் ஆகியோருடன் பிள்ளையாா்நத்தத்துக்கு பைக்கில் சென்றாா்.
முன்னால் சென்ற பைக்கை அவா் முந்தி செல்ல முயன்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்ததாம். இதில் காயமடைந்த 3 பேரும் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆனந்தராஜ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து விளாத்திகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.