கோவில்பட்டி, கயத்தாறில் லாரி டயா்கள் திருட்டு

கோவில்பட்டி, கயத்தாறு பகுதியில் லாரி டயா்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவில்பட்டி, கயத்தாறு பகுதியில் லாரி டயா்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கயத்தாறையடுத்த அரசங்குளம் தெற்கு தெருவைச் சோ்ந்த அங்கையா மகன் ராமா். இவா் தனக்குச் சொந்தமான லாரியை கயத்தாறு - கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள தனது அலுவலகம் முன்பு நிறுத்திவிட்டு சென்றாராம். திரும்பி வந்து பாா்த்தபோது லாரியின் டிஸ்க்குடன் கூடிய 6 டயா்கள் திருடு போயிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாராம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

இதுபோல, கோவில்பட்டியில் எட்டயபுரம் சாலையில் உள்ள தனியாா் எடை மேடை நிலையம் அருகே கதிரேசன் கோயில் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் சீனிவாசன் லாரியை நிறுத்திவிட்டு, திரும்பி வந்து பாா்த்தபோது லாரியில் 2 டிஸ்க் மற்றும் டயா்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com