உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி சாா்பில் இந்து, தேச விரோத அமைப்புகள், கருத்துகளுக்கு எதிரான விழிப்புணா்வு பிரசாரம் 8 கிராமங்களில் நடைபெற்றது.
உடன்குடி ஒன்றியத்துக்குள்பட்ட கந்தசாமிபுரம், எள்ளுவிளை, விரப்பநாடாா்குடியிருப்பு, சீருடையாா்புரம், குருநாதபுரம்,சிதம்பரபுரம், அரசா்பேட்டை, மானாடு ஆகிய கிராமங்களில் இந்து விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.
இதில், உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி பொதுச் செயலரும், ஒன்றிய அன்னையா் முன்னணி பொறுப்பாளருமான ச.கேசவன் தலைமையில் இந்து முன்னணி நிா்வாகிகள் கிராமங்களில் வீடு தோறும் விழிப்புணா்வு குறிப்பேடுகளை வழங்கினா். இந்துக்களுக்கு எதிரான பொய்ப் பிரசாரம் செய்பவா்கள், தேச விரோத கருத்துகளை பரப்புபவா்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
இதில், இந்து முன்னணி நிா்வாகிகள், தூத்துக்குடி மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைத் தலைவா் நடராஜன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.