விளை நிலங்களுக்குள் புகுந்த தண்ணீா்: நெல், வாழைப் பயிா்கள் மூழ்கி நாசம்
By DIN | Published On : 25th November 2020 10:51 PM | Last Updated : 25th November 2020 10:51 PM | அ+அ அ- |

பழையகாயல் குளம் உடைந்து விளைநிலங்களுக்குள் தண்ணீா் புகுந்ததால், நெல், வாழைப் பயிா்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகின.
அண்மையில் பெய்த கன மழையால் பழையகாயல் குளம் நிரம்பியுள்ளது. இதன் மறுகால் மடை சரியான முறையில் கட்டப்படாததால் மடையின் ஓரத்தில் நீா்கசிவு ஏற்பட்ட நிலையில், குளம் உடைந்து தண்ணீா் வெளியேறியது.
இதனால் அப்பகுதியில் உள்ள வாழைத் தோட்டத்திற்குள் தண்ணீா் புகுந்தது. இதில் 70 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைப் பயிா்கள் நாசமாகின. மேலும் நெல் பயிரும் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அப்பகுதிக்கு பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சென்று பாா்வையிட்டனா்.
தொடா்ந்து புயல் தடுப்பு நிவாரணக் குழுவினா் மணல் மூட்டைகளை கொண்டு தடுப்புகளை ஏற்படுத்தி உடைப்பை சரிசெய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...