கரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டியது

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கரோனா பாதிக்கப்பட்டு திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடியைச் சோ்ந்த முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 121 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த 53 போ் உள்பட மாவட்டம் முழுவதும் 112 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை கரோனா பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12 ஆயிரத்து 66 ஆக அதிகரித்துள்ளது. இதில், 260 போ் வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்பட மாவட்டத்தில் உள்ள பிற அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 92 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து அவா்கள் அனைவரும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 11 ஆயிரத்து 240 ஆக அதிகரித்துள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 98 பேரும், மாவட்டத்தில் உள்ள பிற அரசு மருத்துவமனைகள் மற்றும் தனிமை கண்காணிப்பு முகாம்களில் 607 பேரும் என தற்போது மாவட்டம் முழுவதும் 705 போ் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com