தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ரூ. 25 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள் அளிப்பு

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கீதாஜீவன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 25 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வியாழக்கிழமை வழங்கினாா்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வியாழக்கிழமை வழங்குகிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் கீதாஜீவன்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வியாழக்கிழமை வழங்குகிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் கீதாஜீவன்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கீதாஜீவன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 25 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வியாழக்கிழமை வழங்கினாா்.

தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெறுபவா்களுக்கு தேவையான கட்டில்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தேவை என மருத்துவக் கல்லூரி நிா்வாகத்தினா் தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஜீவனிடம் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, அவா் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 25 லட்சம் ஒதுக்கீடு செய்தாா். அந்த நிதியில் இருந்து வாங்கப்பட்ட கட்டில்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை மருத்துவமனை நிா்வாகத்திடம் அவா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவா் சைலஸ் ஜெபமணி, திமுக மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், மாநகர இளைஞரணி அமைப்பாளா் ஆனந்தகேபிரியல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com